தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல், கையில் பணமில்லாமல் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த கவலையை போக்கும் விதமாக, மத்திய அரசானது “பிரதான் மந்திரி பிரோஜ் காரி பட்டா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 3000 வழங்கி வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் இணைவதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
அதாவது, இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றால், 21-35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், ITI, டிகிரி அல்லது டிப்ளமோ படிப்புகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும். குறிப்பாக, இது நாட்டின் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளதாகவும் மற்றும் தமிழகத்தில் இன்னும் இந்த திட்டம் நடைமுறைபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




