
ஐபிஎல் இன் மெகா ஏலத்தில் ஒரு கோடிய பத்து லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பெறப்பட்டு இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் வீரர்தான் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி. இவர் 35 பந்துகளில் சதம் அடித்து ஒரு சாதனையை படைத்திருக்கிறார் என்றும் நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். மிகவும் அதிரடியாக விளையாடும் இந்த வீரர் எப்போது இந்திய அணியில் விளையாடுவார் என்று அனைவருக்கும் கேள்வி இருந்தது.
ஆனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க இவர் குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு விதிமுறை இருக்கிறது. 15 வயதுக்கு பிறகு தான் ஒரு வீரர் தனது நாட்டிற்காக கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று அந்த நிபந்தனை கூறுகிறது. அப்படி பார்க்கையில் இந்த 14 வயது சிறுவன் ஒரு வருடம் காத்திருந்தால் மட்டுமே அவரது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் ஒரு சில போட்டிகளை மட்டுமே வைத்து இந்திய அணியில் இடம்பெற முடியாது. மீதி உள்ள போட்டிகளையும் அடுத்த வருடம் ஐபிஎல் இல் அவர் எப்படி ஆட போகிறார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இந்திய அணியில் அடுத்த வருடம் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சச்சின் ரெக்கார்டையும் இவரால் முறியடிக்க முடியும். சச்சின் அவர்கள் 16 வயதில் முதன்முதலாக இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். வைபவ் களமிறங்கினாள் 15 வயதிலேயே அவர் விளையாடி விடுவார்.