கணவன் மனைவி சண்டையின் போது..!! இந்த வார்தைகளை தவறியும் சொல்லாதீர்கள்..!!

பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.

ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது ஆனால் அது ஒரு போதும் அதிகாரத்தால் முடியாத காரியம் தான்.

இதற்கு முதலில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம். இவ்வாறு நீங்கள் உண்மையான அன்பு வைத்திருந்தால் அதை உங்கள் துணை புரிந்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்தினால் கணவன் மனைவிக்கு இடையில் பெரிதாக கருத்து வேறுப்பாடுகள் வராது.

இருப்பினும் காதல் உறவாக இருந்தாலும், திருமண உறவாக இருந்தாலும் அந்த உறவில் சண்டை ஏற்படுவது மிகவும் சகஜமான விடயம். சண்டைகள் ஏற்படும் போது உறவில் விரிசல் ஏற்படுவதாகவே பலரும் நினைக்கின்றனர்.

உண்மையில் சண்டைகள் ஏற்படும் போது இருவருக்கும் இடையில் புரிதல் அதிகரிக்கவே செய்கின்றது.

சண்டையின் போது சொல்ல கூடாதவை…

ஆனால், சண்டையின் போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் சமயங்களில் நமது அன்புக்குரியவர்களை மனதளவில் மிகவும் காயப்படுத்திவிடும்.

உறவுகளில் விவாதங்கள் வெடிக்கும் போது, ​​நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் விடயங்களை சிறப்பாகவும் ஆக்கலாம் அல்லது மோசமாகவும் மாற்றலாம் இதை நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளே தீர்மாணிக்கிறது.

அதிலும், விவாதம் முற்றிப்போனால் பல பிரச்சனைகளை தம்பதிகள் சந்திக்க நேரிடும். அதனால், குறிப்பிட்ட சில வார்த்தைகளை உங்களது சண்டையின் போது தவிர்த்துவிடுவது நல்லது.

உங்களது அன்புக்குரியவர் செய்யும் ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அது சரியான விஷயம் அல்ல என்று தோன்றினாலோ அதை அப்போதே அந்த இடத்திலேயே அவரிடம் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

இதனால், சண்டை வரும் போது உங்களுக்கு அவரிடம் பிடிக்காத விஷயத்தை அடுக்கடுக்காக எடுத்து வைப்பீர்கள். அப்போது அவரது மனதில், ‘இதையெல்லாம் ஏன் அப்போதே சொல்லவில்லை’ என்று தோன்றும். இதனால், அதை சண்டையின் போது செய்வதை தவிர்க்க வேண்டும்.

சண்டை வரும் தருணங்களில் பழியை ஒருவர் மீதே போடுவது ஒரு விரோதமான சூழலை உருவாக்குகிறது, இது, பரஸ்பர புரிதலுக்கான எந்த வாய்ப்பையும் தடுத்துவிட வாய்ப்புள்ளது.

சண்டை என்றால், அதற்கு ஒருவர் மட்டும் காரணமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது என்ன தவறு உள்ளது என்பதை ஆராய்ந்து அது இனி நடக்காமல் பார்த்துக்கொள்வேன் என உங்கள் துணையிடம் உறுதியளிக்க வேண்டும்.

சண்டையின் போது, “அமைதியாக இரு” என்று சொல்வது மற்ற நபரின் உணர்வுகளை புன்படுத்தும் வகையில் இருக்கும். இதனால், அவர்கள் தனது உணர்ச்சிகள் தேவையற்றவை அல்லது பகுத்தறிவற்றவை போல இருப்பதாக உணர்வர்.

இது அவர்களின் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக, ஆதரவாக நிற்பதும் அவர்களின் உணர்ச்சிகளை சரிபார்ப்பதும் திறந்த உரையாடலுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்க உதவுகிறது.

சண்டையிடும் இருவரில் யாரேனும் ஒருவர் அமைதியாக இருந்தால், அந்த சண்டை மேலும் வலுபெறாது என கூறுவர்.

இது ஒரு வகையில் உண்மை என்றாலும், சண்டையில் ஒருவர் பல கேள்விகளை கேட்கும் போதோ, அல்லது பேசிக்கொண்டிருக்கும் போதோ அதை காதில் வாங்கியும் வாங்காதது போல கடந்து செல்வது தீர்வாக அமையாது.மாறாக, இது மேலும் கோபத்தை தூண்டி விடும்.

எனவே, உங்களுக்கு அந்த சண்டையில் பேச பிடிக்கவில்லை என்றால்,‘இது குறித்து பின்னர் பேசலாம்’ என்று கூறுவது ஒரு வித புரிதலை உருவாக்கும்.இதை தவிர்த்து கோபமான வார்த்தைகளை கொட்டுவது துணையின் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

சண்டை தீர்ந்த பின்னரும் கூட கடுமையான வார்த்தைகள் மறப்பதில்லை இது உறவை வலுவாக பாதிக்கும்.

Read Previous

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

நாளைக்கு சண்டே..!! இந்த மாதிரி சிக்கன் கிரேவி செஞ்சு பாருங்க..!! சிம்பிள் செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular