காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் மீண்டும் நீர் வரத்து அதிகரித்து, விநாடிக்கு 50,000 கனஅடியாக உள்ளது. இன்று (ஜூன் 30) காலை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீர் வரத்து இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் சவாரி, அருவிக் குளியலுக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.




