தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே அதிகளவில் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சமமாக மதுபானங்களை வாங்கும் புதிய நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் சில பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டாஸ்மாக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், உயர்தர எலைட் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட ரக மதுபானங்கள் கட்டாயம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




