சட்டவிரோத சூதாட்ட செயலிகள் விவகாரத்தில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கூகுள், மெட்டா நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக சூதாட்ட செயலிகளை ஊக்கப்படுத்தி, பயனர்களை சென்றடைய உதவுகின்றன. வழக்கு விசாரணைக்காக ஜூலை 21 (நாளை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கூகுள், மெட்டா நிறுவன பிரதிநிதிகள் ஆஜராக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.




