‘முதியோர் இல்லம்’..!! முற்பகல் செய்த வினை பிற்பகல் தானே வரும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அது ஒரு ‘முதியோர் இல்லம்!’

 

வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கஷ்டப்பட்டு சுமந்து சென்று உள்ளே வைத்தார்கள்.

 

”மருந்து எல்லாம் தவறாம சாப்பிடுங்கப்பா… எதாவது அவசரம்னா போன் பண்ணுங்க” என்றபடி இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பிச்செல்ல…

 

முதல் நாள் பள்ளியில் விட்டுச்சென்ற குழந்தையைப்போல் அந்த முதியவர் தன் மகனையை பார்த்து நிற்க, பேரன் மட்டும் ஏதும் புரியாமல் டாடா காட்டியபடி சென்றான்!

 

கார் சென்றுகொண்டு இருந்தது. குழந்தை முன் சீட்டில் உட்கார்ந்திருக்க மனைவி பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்!

 

ஏக்கத்துடன் குழந்தை, ”ஏன்பா தாத்தாவ நம்ப வீட்ல வச்சிக்காம இங்க விட்டுட்டு வர்றோம்?!”

 

தந்தை, ”தாத்தாவுக்கு வயசாயிடுச்சி இல்லையா, அதான் இங்க விட்டுட்டு வர்றோம்! இங்க இருந்தாதான் சந்தோஷமா இருப்பாரு…”

 

”அப்போ உங்களுக்கும் வயசாயிடுச்சின்னா நான் இங்கதான் கொண்டுவந்து விடனுமா…?!”

என்ற குழந்தையின் கேள்வியில், அதிர்ந்துபோய் பிரேக்கை அழுத்த… காதை கிழிக்கவேண்டிய சத்தம் ஏனோ அவர்களுக்கு நெஞ்சை கிழித்தது…

 

முற்பகல் செய்த வினை பிற்பகல் தானே வரும்…

 

Read Previous

நமக்கு பெரிதும் தெரியாத விதி..!! இது தெரிந்தால் நீங்கள் என்ன நினைத்தாலும் அதுவாகவே ஆவீர்கள்..!!

Read Next

ரசப்பொடி எப்படி அரைக்க வேண்டும் தெரியுமா?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular