
திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரையாண்டு விடுமுறையின் போது அந்த சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார்.
தொடர்ந்து சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. போக்சோவில் மாணவன் கைது இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கே.வி.ஆர். நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.