10-ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்?.. உங்களுக்காக கொட்டிக்கிடக்கும் தேர்வில்லாத அரசு வேலைகள்..!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது முயற்சித்து  வருகிறார்கள். மேலும், ஒரு சில பேர்   நினைப்பது, டிகிரி படித்து போட்டித் தேர்வுகளை எழுதினால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என்று, ஆனால் அது முற்றிலும் தவறு.  அரசு அவ்வப்போது தேர்வில்லாமல் அரசு வேலையில் அமரக்கூடிய சில காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. அதற்கு அதிகப்பட்சம் 10ம் வகுப்பு மட்டுமே தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்  சிலருக்கு தோன்றலாம், இம்மாதிரியான  அரசு பணியில் கூடுதல் சலுகைகள் கிடைக்கிறதா..? எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது..? எம்மாதிரியான பதவிகள் கிடைக்கும்..? விடுமுறை வசதிகள் உண்டா..? என்று, உங்களுக்காகவே இப்பதிவில் 10 வகுப்பு தேர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு எம்மாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதையும் அவற்றின் விவரங்களையும் கீழுள்ள பத்தியில் விரிவாக  தொகுத்து வழங்கியுள்ளோம்.

TNPSC குரூப் 4 தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். இத்தேர்வு மூலம்  கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  இதில் தேர்ச்சி பெற்று பணியில் அமர்பவர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.15,900 தொடங்கி ரூ.75,900 வரை வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடை வேலை, இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் கோவில் சம்பந்தப்பட்ட வேலை, மாவட்ட சுகாதார சங்கம் வேலை, தமிழ்நாடு செய்தியாளர் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வேலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை வேலை, சிறார் நீதி வாரியம் வேலை மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் என 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு  பல்வேறு இடங்களில் அரசு வேலைகள்  கொட்டிக்கிடக்கின்றன. அதே,  மத்திய அரசு வேலைகள் என்று எடுத்துக்கொண்டால், இராணுவம், ரயில்வே போன்ற துறைகளில் ஒரு சில பதவிகளுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள்  கொட்டிக்கிடக்கின்றன  . மேலும்,  மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம், இதற்கான தேர்வுகள் நடைபெறும் தேதியை அவ்வப்போது  வெளியிட்டு வருகிறது. இதை நீங்கள் தவறவிடாமல் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்.

Read Previous

மாட்டு வண்டி.. இன்றைய குட்டி கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

காரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular