
18 வருட மன வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியை பிரிவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சேவியர், எல்லா கிரேஸ், ஹேட்ரியன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் குடும்பத்தினராக உள்ளனர். இவர்கள் பிரிந்தாலும் தங்களது குழந்தைகளை பாதுகாப்பான அன்பான மற்றும் கூட்டு சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979 இல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.