• September 29, 2023

2 நாட்களுக்குள் தொடரும் அதிக வெப்பநிலை..!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

மேற்கு திசை காற்றின்   வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் 10.08.2023 வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓர் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌவுகரியம் ஏற்படலாம். சென்னையில் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 -38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 -29 செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

Read Previous

விவசாயிகளுக்காக சிறைக்குச் சென்ற பாமகவினர்..!! நேரில் சென்று ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ்..!!

Read Next

குடையுடன் பள்ளியில் அமர்ந்த மாணவர்கள்..!! வைரலாகும் புகைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular