
20 வயது பெண்ணை திருமணம் செய்த 40 வயது ஆண் கொலை..!! 6 பேர் கைது..!!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர் தனது முன்னாள் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகக்கூறி 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து வந்த இவருக்கு, 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள், மஞ்சுநாத்தின் வீட்டிற்கு சென்று அவரை அடித்துக்கொன்றனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.