40 ஆண்டு காலத்திற்கு முன்பு முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் தலைமையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதால் அதனை உடனே பராமரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது…
நாமக்கல் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காடு பஞ்சாயத்து அண்ணா நகர் பகுதியில் உள்ள வீடுகள் பாழடைந்து மோசமான நிலையில் உள்ளது, உடனடியாக பராமரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என கோரிக்கை அவர் பொது மக்களால் எழுந்துள்ளது, 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீடுகள் எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது மேலும் இந்த வீடானது எம் ஜி ராமச்சந்திரன் தலைமையில் அவரின் திட்டத்தின் கீழ் இந்த வீடு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர், மேலும் இந்த வீட்டினை மறு சீரமைப்பு பணி செய்து தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கையாக கிராம நிர்வாகிகள் வைத்துள்ளனர், மேலும் இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற அரசு தெரிவித்துள்ளது…!!




