நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் சத்தான உணவு முறைகளை பின்பற்றுவார்கள் அதனால் தான் என்னவோ நம் தாத்தாவும் பாட்டியும் கூட சுறுசுறுப்பாகவும் உடல் ஆரோக்கியத்துடனும் அனைத்து வேலைகளையும் முன்வந்து செய்வார்கள். ஆனால் இன்றோ தொடர்ந்து ஒரு மணி நேரம் வேலை செய்ய நம் மனதும் ஒத்துழைக்கவில்லை உடலும் ஒத்துழைக்கவில்லை அதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு முறையே. இந்நிலையில் 60 வயது ஆனாலும் எலும்புகள் வலுவாக இருப்பதற்கு என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
எலும்புகள் வலுவாக இருப்பதற்கு கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் கேழ்வரகு என்பது தினசரி வாழ்க்கையில் ஒரு உணவாக சாப்பிட்டார்கள். நான் இந்த காலகட்டத்தில் கேழ்வரகு சமைப்பதற்கும் யாருக்கும் நேரமில்லை சாப்பிடுவதற்கும் பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் கேழ்வரகு சாப்பிட்டால் எலும்புகள் வலுபெறும்.
எள்ளில் செய்த உணவை தினமும் உட்கொண்டால் எலும்புகள் வலுவாகும்.
குறிப்பாக எலும்புகள் உறுதியாக இருக்க பப்பாளி, பீன்ஸ், பாதாம் ,முந்திரி, நட்ஸ் வகைகள், பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நாம் எலும்புகள் வலுவாக இருக்கும். கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும். எனவே சத்தான உணவு முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.




