தூத்துக்குடி மாவட்டத்தில் சைமன் அரவிந்த் சிங்க் என்பவர் குமிழ் முறை புத்தக வண்டி என்ற சிறிய துவக்கத்தில் கவிதை, கதை, கட்டுரை, மற்றும் நாவல் புத்தகங்களை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் (voc collage தூத்துக்குடி) அருகில் தினந்தோறும், கல்லூரி முடியும் வேளையில் புத்தகங்களை வாசிக்க தன் வண்டியவே நூலகமாக மாற்றியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் கல்லூரி முடிந்து வருபவர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் ஊழியர்கள் மற்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை சில நிமிடங்கள் நின்று சில புத்தகங்களை எடுத்து அங்கே வாசித்து அவரை வாழ்த்தியும் வருகிறார்கள் இச்சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது, குமிழ்முனை புத்தக வண்டியின் புத்தகம் வாசிக்கும் நோக்கத்தை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.




