நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக மேட்டூரில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில், மேட்டூரில் உள்ள உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது இது காவேரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..
மேட்டூர் அணையில் இருந்து காவேரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீர் வரத்தானது வினாடிக்கு 22,072 ஆக உயர்ந்துள்ளது, அதில் காவிரியில் இருந்து 20,682 கன அடியாக வெளியேற்றப்பட்டுள்ளது, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகள் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது, காவேரி பகுதியில் தண்ணீர் வரத்து காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்கின்றனர், மேலும் இந்த முறை அதிக லாபம் காணலாம் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர், மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரானது காவேரி வழியாகச் சென்று விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் இருக்கும் என்று கூறுகின்றது தமிழக அரசு..!!




