தமிழ் திரையுரகில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற படங்களில் மிக முக்கிய பிரபலமாக நடித்து வருபவர் நடிகர் அரவிந்த்சாமி, ஆனால் அவர் தனது வேலையை மட்டுமே செய்துவிட்டு பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழும் மனிதர்களில் அவரும் ஒருவர், தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்றும் தங்களின் நேரங்களை தங்கள் குடும்பத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறியுள்ளார்…
எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப் போகிறீர்கள் என நடிகர் அரவிந்த்சாமி கேள்வி எழுப்பி உள்ளார், ரசிகர் மன்றங்கள் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என சொன்னால் நான் அதை ஊக்குவிக்க மாட்டேன் அப்படி இருக்கும்போது என் மகனுக்கு ஒரு அட்வைஸ் ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸா என்னால் எப்படி தர முடியும் என்று கூறியுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி, மேலும் அவரவர் வேலைகளை செய்து அவர்களது குடும்பத்தை பார்ப்பதே சிறந்த செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்..!!




