சிறியவர் முதல் பெரியவர் வரை சளி பிடித்தால் நீங்குவது கடினம், ஒரு வார காலமாவது சளி பிடித்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை வாட்டி வதைத்து விடும், சளியை சரி செய்ய வீட்டில் இருந்தபடியே முன்னோர்கள் சொல்லிய வைத்தியங்களை செய்தாலே போதும் சளிகள் கரைந்து விடும்..
சளி நீங்குவதற்கு முதலில் செய்ய வேண்டியவை நொச்சி இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த இலைகளுடன் கற்பூரவள்ளி இலையும் சேர்த்து ஆவி பிடித்தாலே நெஞ்சு சளி கரைய ஆரம்பித்து விடும், அதேபோல் சுடுதண்ணீரை கொதிக்க வைத்து நொச்சி இலையை அரைத்து அதில் கலந்து குளித்து வந்தால் கடும் தலைவலி மற்றும் உடல் உபாதைகள் நீங்கும் அதேபோல் நொச்சி இலையின் புகையை எரித்து சுவாசித்தால் தலைவலி தலைபாரம் ஆயுள் முழுவதும் வராது, மேலும் கற்பூரத்தை நல்லெண்ணையில் சிறிது வைத்து சூடு ஏற்றிய பின்பு நெஞ்சு தலை மூக்கு உடல்களில் தேய்த்து வந்தால் குழந்தைகளுக்கு நெஞ்சு சளி கரைந்து விடும், மேலும் துளசி, குப்பைமேனி, தின்ருத்தி பச்சை இலைகளை கசாயமாக செய்து தருவதன் மூலம் சளி குறையும் மேலும் தூதுவளை ரசத்தை வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தாலும் சளி கரைந்து விடும்..!!




