அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) , முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) என இரண்டு மருத்துவ திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த மே 24,2024 அன்று மத்திய அரசு ECHS என்ற முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் 40 தனியார் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நோயறிதல் மையங்களை இணைத்துள்ளது.
மேலும், இந்த செயல்முறை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுத்தப்படுகிறது. இதில், ECHS-ல் உள்ள பயனாளிகளுக்கு இலவச சேவைகள் மற்றும் சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட CGHS குழுவுடன் இணைந்து வழங்கப்படும்.




