இந்திய ஆடவர் அணியில் டெஸ்ட், T20, ODI என அனைத்திலும் நம்பர் 1 ஆட்ட நாயகனாக வலம் வருபவர் தான் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைக்கு அளவே கிடையாது. மேலும் IPL தொடரிலும் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். தற்போது இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது விராட் கோலி மீண்டும் RCB அணியின் கேப்டனாக விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு கேப்டனாக இருந்த டூ பிளெசியாலும் கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை கேப்டனாக கோப்பைக்கு முயற்சி செய்ய கோலி விரும்புவதாகத் தெரிகிறது.




