ஒரு மகன் தன் அப்பாவை பற்றி எழுதிய கண்ணீர் வர வைக்கும் கடிதம்..!!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி…..

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்.. நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா ‘தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக’ நினைத்துக் கொண்டிருக்கிறார்.

16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர்… லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக் கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்.. நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்.. அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்.

45 வயதில்-
குழந்தைகளை, அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ?

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை..

இப்படி முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு மகளுக்கோ முதல் நிலையிலிருந்து வெளியே வர விருப்பமில்லாததால் “அப்பா the Best” என அறிவதற்கு யுகங்கள் தேவைப்படுவதில்லை.

Read Previous

உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? பத்து நாளில் 2 கிலோ குறைக்கலாம்..!!!

Read Next

“ஒரு பெண் திருமணமான இரண்டுவருடங்களில் எவ்வாறு நடத்தப்படுகிறாளோ அதை அவள் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை” என்பதை உணர்த்த வைக்கும் பதிவு..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular