🔵 மகளுக்கு அடிவயிறு நொந்துவிடும் என்று
அந்த மூன்று நாட்களும் ,
தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!!
🔵 கிணற்றடியில் குளிக்கும் போது
யாராவது எட்டிப்பார்த்தால்
இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!!
🔵 அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!!
🔵 பள்ளிக்கு நேரம் சென்றால்
தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!!
🔵 பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!!
🔵 நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில்
கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!!
🔵 எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!!
🔵 பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் ஆண் நட்புகள்!!!
🔵 ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்…




