சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன்..!! வறுமையை உணர்த்த மகான் ஒருவர் கூறிய கதை..!!

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் –

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், “”மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, “”மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்…” என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, “”மனிதனே, நீயும் தேடு… மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்” என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், “”நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்” என்றார்.

Read Previous

பால் திரியாமல் கருப்பட்டி டீ போடுவது எப்படி என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா இதோ..!!

Read Next

ஏன் தண்ணி தெளிக்கிறோம்..!! ஏன் உள்பக்கமா மடிக்கிறோம்..!! வாழை இலை நாகரிகம் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular