உங்கள் குழந்தை சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அடம் பிடிக்கிறதா அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது..
குழந்தைகள் பேசும் போது பெற்றோர் வேலையிலோ அல்லது ஃபோனில் மூழ்கி இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்கிறார்கள். இதனால் அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்பதில்லை, குழந்தைகள் அந்நியமாகவும் அல்லது புரிந்து கொள்ளப்படாமலும் உணர்வதால் அவர்கள் தங்கள் பெற்றோர்களுடனான உரையாடலை நிறுத்திக் கொள்கிறார்கள், பெற்றோர் தொடர்ந்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கும் போது அது குழந்தைகளுக்கு அதிகப்படியான வேதனையை அளிக்கும், சில நேரங்களில் குழந்தைகள் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நீங்கள் கூறுவதை கேட்காமல் இருக்கலாம், தெளிவற்ற அறிவுறுத்தல்கள் உங்கள் குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இதனால் அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்காமல் போய்விடுகிறார்கள், உங்கள் குழந்தைகளிடம் கடினமான வார்த்தைகளை உபயோகிக்கும் போது கத்தும் போதும் அல்லது அதிகம் அவர்களை விமர்சிக்கும் போதும் குழந்தைகளுக்கு பயம் ஏற்படுகிறது, அதிக விதிகள் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் ஆனால் அவர்கள் உங்களிடம் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அவர்களை போராளி ஆக்குகிறது இதனால் குழந்தைகளிடம் அன்பாகவும் அவர்களை அணுகும் போது அவர்கள் கண்களை பார்த்து பேச வேண்டும் மேலும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாக சொல்ல வேண்டும்…!!




