வீட்டு வேலைக்கு வந்த பெண் கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!
கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் உள்ள தேவிகன் தெருவில் நல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை வேலைக்கு சென்ற பெண்ணை பின் தொடர்ந்த மர்ம நபர் அவர் வைத்திருந்த ஆயுதத்தால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




