தேவையான பொருள்: அதிமதுரம் பொடி ஒரு தேக்கரண்டி பால் 150 மி.லி தேன் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு தூள் சிறிதளவு செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் பாலுடன் அதிமதுரம் பொடி ,மிளகு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த பாலுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எல்லா விதமான இருமல் எளிதாக குணமாகும்.