மனிதர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது என்பது குறித்தும் அதனால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் தெளிவாக பார்க்கலாம்.
சிவன் பெருமான் முதல் அவரை தொழுத சித்தர்கள் வரை ருத்ராட்சம் மாலை அணிந்திருப்பார்கள். உலகின் மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக ருத்ராட்சம் பார்க்கப்பட்டு வருகிறது. சிவனின் கண் தான் இந்த ருத்ராட்சம் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவபெருமானின் அருளை பெறவே இந்த ருத்ராட்ச மாலையை அணிந்து வருகின்றனர்.
மேலும் அதை பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியம் என்று எல்லாராலும் நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி ருத்ராட்சத்தில் கோடுகள் தென்படும், அதை நாம் முகம் என்று கூறுகிறோம். அதன்படி, ஐந்து முக ருத்ராட்சம், ஆறு முக ருத்ராட்சம் உள்ளிட்ட 38 வகை ருத்ராட்சங்கள் இந்த பூமியில் உள்ளது. இதில், 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சங்கள் அனைத்தும் அபூர்வமாகக் கிடக்கிறது. இவை அனைத்தும் மிக அதிக விலை கொண்டதாக இருக்கிறது.
11 முக ருத்ராட்சம் அனுமனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கெளரி சங்கர் ருத்ராட்சம் இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும். 5 அல்லது 6 முக ருத்ராட்சத்தை அணிந்து ஈசனின் அருள் பெறலாம். இவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் மற்ற ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது.




