அன்று வாழ்ந்தவர்கள் எல்லாம் ஒரு அதிர்ஷ்டசாலிகள் இன்று உள்ளவர்கள் அதை கனவில் கூட பார்க்க முடியாது.
கிராமத்தில் வசதி குறைவாய் இருப்பதால் கிராமத்தில் , ஒரு வீட்டில தொலைகாட்சி பெட்டி வைத்துக் கொண்டு எல்லோரும் குடும்பமாய் படம் பார்ப்பார்கள். அது ஒரு காலம், அதில் மனசு சந்தோஷமாக இருந்தது.
அவர் அவர்கள் வீட்டில் டீவியில் பார்ப்பதை விட ஊரே சேர்ந்து ஒரு வீட்டில் உட்க்கார்ந்து பார்ப்பதில் ஒரு தனி சந்தோசம் அனுபவித்த அவர்களுக்குத் தான் தெரியும் அப்ப எல்லோரிடமும் ஒற்றுமை இருந்தது.
சில கிராமப்புறன்களில் பஞ்சாயத்து சார்பில் ஒரு டிவி பொது இடத்தில் வைக்கப்பட்டு மாலை நேரங்களில் இரவு 9 மணிவரை பார்ப்பதற்கு போடுவார்கள் ! டிவி வருமுன்பு ரேடியோ சேவை இருக்கும்.. . இது ஒரு வகையில் மக்களை ஒன்றுபடுத்தும் அம்சமாக இருந்தது.. மகிழ்ச்சியை மக்களுக்கு பகிர்ந்தது… 👌 அருமையான நினைவூட்டல். 🙏




