மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வேப்ப விதை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலுமாக குறையும்.
மூல நோய் என்பது அவ்வளவு சாதாரண நோய் அல்ல அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. இந்நிலையில் மூலநோயில் ரத்தம் வருவது குறைய மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து தண்ணீர் விட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு கழுவி வந்தால் மூலத்தில் ரத்தம் வருவது குறையும். அதுமட்டுமின்றி தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் ரத்தம் மூலம் குறையும்.




