சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் தான் ஐஸ்கிரீம். ஐஸ்கிரீமை பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதை வெயில் காலத்தில் ஐஸ்கிரீமை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை பலர் வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த ஐஸ்கிரீமை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல தீமைகள் நடக்கும். அவை என்னென்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
வலி நிவாரணையாக பயன்படுத்தப்படும் டை எத்திலின் கிளைகால் என்னும் வேதிப்பொருளை கலந்து இந்த ஐஸ்கிரீமை செய்கிறார்கள். இது நமது உடலுக்கு பெரும் கேடு தரக்கூடியது. அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீமை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
இது மட்டும் இல்லாமல் குடல் புண்களை அதாவது அல்சரையும் இது தரக்கூடும். மேலும் இதயத்தில் வழி சிறுநீரகங்களில் பாதிப்பு என பல பிரச்சனைகள் வரும். ஐஸ்கிரீம் சீக்கிரம் உருகாமல் இருக்க ஷாம்பு மற்றும் சோப்புகளில் பயன்படுத்தும் பாலிசார்பேட் 80 என்னும் வேதிப்பொருளை உபயோகிக்கின்றனர். ஆகையால் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.




