நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை யாராக இருந்தாலும் சரி கீழே படுக்கும் பொழுது காதை நன்றாக பூர்த்திக்கொள். காதுக்குள் ஏதாவது பூச்சி புகுந்துவிடும் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் காதுக்குள் ஏதாவது எறும்பு மற்றும் பூச்சி புகுந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி ஏதாவது புகுந்து புகுந்து விட்டால் ஆலிவ் ஆயில் மூன்று சொட்டு காதுக்குள் விடவும். இவ்வாறு விடுவதன் மூலம் பூச்சிகள் நீண்ட நேரம் காதுக்குள் இருக்க முடியாமல் தானாகவே வெளியே வந்துவிடும். அதுமட்டுமின்றி மிதமான சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து காதுக்குள் நான்கு சொட்டு விட்டால் பூச்சி உடனே வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இன்னொரு முறை என்னவென்றால் பூச்சியோ எறும்போ காதுக்குள் சென்று விட்டால் உடனடியாக ஒரு அறைக்குள் சென்று லைட் ஆப் செய்து எந்த காதில் பூச்சி புகுந்ததோ அந்த காதில் வெளிச்சம் காட்ட வேண்டும் டார்ச் லைட் மூலமாகவோ அல்லது செல்போன் லைட் மூலமாகவோ அந்த காதில் வெளிச்சம் காட்டுவதன் மூலம் பூச்சி தானாக வெளிவந்துவிடும். இந்த முறைகளை எல்லாம் உடனே செய்து பாருங்கள். இது எதுக்கும் அந்த பூச்சி வெளியே வரவில்லை என்றால். அருகிலுள்ள மருத்துவரை பாருங்கள்.



