நமது உணவுகளில் தினமும் நிச்சயம் இருக்கும் ஒரு பொருள்தான் அரிசி சாதம். இந்த சாதம் மீதம் ஆகிவிட்டால் தண்ணீரை அதில் ஊற்றி அடுத்த நாள் பழைய சோறாக சாப்பிடும் பழக்கம் பல பேருக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் அந்த சாதத்தை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடு படுத்தி சாப்பிடுகிறார்கள். அப்படி செய்வதனால் என்ன நடக்கிறது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
அரிசி சாதத்தை மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் பல தீமைகள் நமக்கு வந்து சேரும் என்றும் அது விஷத்துக்கு சமம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிசி சாதத்தில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா இருக்கிறது. இது சாதத்தை மீண்டும் சூடு படுத்தும்போது விஷமாக மாறுகிறது.
ஆகையால் தான் சாதத்தை பிரிட்ஜில் வைத்து சூடு படுத்தி சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்க சாதத்தை வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். சூடான சாதத்தை சமைத்த சில மணி நேரங்களில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சாதத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும்.




