சாலை அல்லது எதிர்பாராத விபத்துகளில் சிக்கி ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிடும் பட்சத்தில், அவரின் உடலில் இருக்கும் பிற உறுப்புக்கள் படிப்படியாக செயலிழக்கும். மூளைச்சாவு பிற உறுப்புகளின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கிவிடும். ஆகையால், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் தானம் செய்யலாம். மருத்துவர்களும் இதுகுறித்து உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு எடுத்துரைப்பார்.




