மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!! காவல்துறை விசாரணை..!!

திருவனந்தபுரத்தில், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மனைவியை மின்வயரால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்துகொண்டார். பாசுரன் ஆசாரியின் (73) மனைவி ஜெயந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இதனிடையே பாசுரன் 5-வது மாடியில் இருந்து குதித்து நேற்று (அக்., 09) தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் –ஒவ்வொரு விளையாட்டும் சொல்லும் அற்புதப் பாடங்களை பாருங்கள்..!!

Read Next

Degree தேர்ச்சி போதும்.. ரயில்வேயில் 5,800 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular