தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெங்கு நோய் அதிகம் காணப்படுகிறது. மழைக்குப் பிறகு வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தேங்கும் நீரில் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் பெருகி டெங்கு பரவுகின்றன. பூந்தொட்டிகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் குவளைகள், நீர்த் தொட்டிகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. டெங்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.




