ஆதார் ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை திருத்தங்களுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெயர், முகவரி போன்ற விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 30, 2028 வரை நடைமுறையில் இருக்கும். கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ. 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..




