பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.



