நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப பரிகாரம்..!!

 

திங்கட்கிழமை காலையில் நீராடி அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அங்குள்ள விநாயகப் பெருமானை மனதார வணங்குங்கள்.

அதன் பிறகு வீட்டிற்கு வருகை தந்து வீட்டில் உள்ள விநாயக பெருமானின் உருவப்படத்திற்கு முன் விளக்கினை ஏற்றுங்கள். பசு நெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும் திரி உங்களது விருப்பம்.

அந்த விளக்கில் ஒரு ஏலக்காயை இட வேண்டும். விளக்கில் இடுவதற்கும் முன் அந்த ஏலக்காயை உங்களது உள்ளங்கையில் வைத்து, உங்களது கோரிக்கையை விநாயகப் பெருமான் முன் சமர்ப்பணம் செய்யுங்கள்.

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையன்று விளக்கில் உள்ள ஏலக்காயை எடுத்து சேகரித்து வைத்த பிறகு, புதிதாக மீண்டும் விளக்கேற்றி இரண்டாவது ஏலக்காயையும் உள்ளங்கையில் வைத்து பிரார்த்தித்து விளக்கில் இடவேண்டும்.

இதேபோல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஏழு ஏலக்காய்களை விளக்கில் இட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

ஏழாவது நாள் பிரார்த்தனை செய்து நிறைவடைந்தவுடன் இருபத்தியொரு ஏலக்காய்களைக் கொண்டு மாலையாக தொடுத்து அதனை அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வணங்கி அந்த மாலையை விநாயகப் பெருமானுக்கு சாற்றி விட வேண்டும்.

அதன் பிறகு உங்கள் கைகளில் இருக்கும் விளக்கில் இட்ட ஏழு ஏலக்காய்களை அருகில் உள்ள ஓடும் நதியிலோ அல்லது சிவாலயங்களில் உள்ள குளங்களிலோ விட வேண்டும்.

இதனை நீங்களும் செய்து உங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கலாம்.

Read Previous

கண் திருஷ்டி நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?.. உருளியை இந்த முறையில் வைங்க..!!

Read Next

வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular