தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று 4 புதிய ரயில் சேவைகளை தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பாலக்காடு-பொள்ளாச்சி மற்றும் மயிலாடுதுறை-காரைக்குடி இடையே பயணிகள் ரயில்களும், போத்தனூர்-தன்பாத் இடையே ‘அம்ரித் பாரத்’ விரைவு ரயிலுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி-மங்களூரு இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதால், பொதுமக்களும் பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



