இந்த அறிகுறிகளை அலட்சிப்படுத்தாதீங்க.. மாரடைப்பை ஏற்படுத்தும் ஜாக்கிரதை..!!

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.

 

மாரடைப்பு தற்காலத்தில் மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான விளக்கம் மற்றும் உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்து நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை.

 

 

 

மார்பில் வலி ஏற்பட்டாலோ அது மாரடைப்பு தான் என்று அனேகமானோர் நினைத்துக்கொள்கின்றனர். பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பது தொடர்பில் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது அவசியம்.

 

கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் ஆகியன இதற்கு பிரதான காரணங்களாக திகழ்கின்றது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, சரியான உணவை தவறாமல் உட்கொண்டால், மாரடைப்பு என்ற ஆபத்தை பெருமளவு குறைக்க முடியும்.

 

இருப்பினும் மாரடைப்பின் முதற்கட்ட அறிகுறிகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

மாரடைப்பின் பிரதான அறிகுறிகள்

மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிப்பதே நிலைமையை மோசமாக்குகிறது.

மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமல்லாது பெரும்பாலும் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றது.

 

 

அந்த மோசமான நிலை வருவதற்கு முன்னதாக உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, நீண்ட காலமாக சோர்வை உணர்ந்தால் அதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது.

தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான நோய்களால் ஏற்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனைகள் இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுவாசம் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், அது நரம்புகள், தசைகள் அல்லது எலும்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலி ஏற்படுவது இதயம் தொடர்பான சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

 

 

உடலின் இடது பகுதியில், குறிப்பாக மார்பு, கழுத்து, தாடை அல்லது முகத்தின் இடது பக்கம் அல்லது இடது கையில் வலி இருந்தால், இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்புக்கு முன், தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படும். குறிப்பாக இந்த அறிகுறிகள் தொடர்ந்து உணரப்பட்டால், இதய பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

நெஞ்சு வலி என்பது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

 

குறிப்பாக அடிக்கடி நெஞ்சு வலி அல்லது மரத்துப்போனால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஏனென்றால், இந்த அறிகுறிகள் இதயம் தொடர்பான நோய்களின் பிரதான அறிகுறிகளாக காணப்படுகின்றன.

மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளல் அவசியம்.

Read Previous

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கல்லீரல் பலமாகுமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

இந்த பிரச்சினைகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் உணவுக்கு பின் கராம்பு டீ குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular