அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்..ஏன் தெரியுமா..??

Oplus_131072

 

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால்,
”வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம்
நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்…

”மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச்
சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல
தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, ‘செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம்
குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை’ என அந்த
நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் அறிந்ததிலிருந்து செம்புக்
குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக்
குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத்
தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும்
மினரல் வாட்டர் மாதிரி அருமையாக
மாறிவிடுகிறதாம்.

செம்பு குடம் இலலைனாலும் பரவாயில்லை.
ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள
போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத்
தண்ணி தரமானதா மாறிடும்.

மூணு நாளைக்கு ஒரு தரம்
செம்பு தகட்டை எடுத்துப்
பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும்.

அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டுத் திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல
செம்பு குடத்துலதான் தண்ணி வைத்துக் குடிக்கிறார்கள். .

 

Read Previous

பத்து நோய்களை பக்காவாக தீர்க்கும் கஷாயம்..!!

Read Next

தாங்க முடியாத குதிகால் வலிக்கு அற்புத தீர்வுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular