Oplus_131072
சர்க்கரை நோய் :
உலர்த்திய கீழாநெல்லிப் பொடியை தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாத்து, டயாலிஸிஸ் போன்ற கடுமையான நிலைகளிலிருந்து காக்க உதவுகிறது.
சொறி – சிரங்கு :
கீழாநெல்லி இலையை உப்புடன் சேர்த்து அரைத்து குளித்து வந்தால், சொறி மற்றும் சிரங்கு போன்ற தோல் நோய்கள் படிப்படியாக குறையும்.
சிறுநீர் பாதை பிரச்னைகள் :
கீழாநெல்லி இலையிலிருந்து சாறு பிழிந்து, அதில் கற்கண்டு கலந்து குடித்தால் சிறுநீர் சம்பந்தமான தொந்தரவுகள் நிவர்த்தி பெறும்.
மஞ்சள் காமாலை :
நன்றாக சுத்தம் செய்த கீழாநெல்லி இலையை அரைத்து, எலுமிச்சை சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும். ஹெபடைட்டிஸ் ‘B’, ‘C’ காரணமாக ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
அதிக ரத்தப்போக்கு :
கீழாநெல்லி வேரை இடித்து சாறு எடுத்து, பசும்பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
கண் மஞ்சள் நிறம் :
கீழாநெல்லிக் கீரையை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம் மாறும்.
நக நோய்கள் :
கீழாநெல்லி இலை, உளுந்து, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து நகங்களில் தடவினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகும்.
வெள்ளைப்படுதல் :
கீழாநெல்லி இலை, கோவை இலை, அசோக மரப்பட்டை, நாவல் மரப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குறையும்.
பித்த வெடிப்பு – சேற்றுப் புண் :
கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு மற்றும் சேற்றுப் புண் குணமாகும்.
கீழாநெல்லி பயன்படுத்தும் சில எளிய முறைகள்
உடல் சூடு & தொற்று நோய்கள் :
கீழாநெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து தினமும் மூன்று வேளையும் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். தொற்று நோய்கள் அணுகாது.
வயிற்றுப் புண் :
ஒரு டம்ளர் மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையை கலந்து காலை நேரத்தில் குடித்தால் வயிற்றுப் புண் மற்றும் செரிமான கோளாறுகள் நீங்கும்.
தலைவலி :
நல்லெண்ணெய், கீழாநெல்லி வேர், சீரகம், பசும்பால் ஆகியவற்றை அரைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி தணியும்.
வெள்ளைப்படுதல் (கஷாயம்) :
கையளவு கீழாநெல்லி இலையை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து, ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து காலை மற்றும் மாலை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ரத்த சோகை :
கீழாநெல்லி மற்றும் கரிசாலையை சம அளவு அரைத்து தினமும் 10 கிராம் அளவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை குறையும்….




