கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வரை வழங்குவதாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 2016-ல் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை போல, தற்போதும் கோவை தெற்கில் தேர்தல் தள்ளிப்போகலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.




