நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் ரசிகை ஒருவர் கண்ணீர்மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வாக்கு செலுத்த புறப்பட்டேன். ஆனால் விமானத்தை தவறவிட்டு விட்டேன். என்னால் வரமுடியவில்லை. ஒரு ஓட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என கேட்கலாம். ஆனால் அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று என கண்ணீர்மல்க பேசியுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும், நெட்டிசன்கள் விமர்சனம் முன்வைத்தும் வருகின்றனர்.




