சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான நேற்று 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் தவித்தனர். பலர் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கினர். இந்த சூழலில் 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்., 24) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்து செயல்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கோடை வெப்பம் காரணமாக பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.




