Oplus_131072
*என் மனைவி ஒரு தீர்க்கதரிசி*.
ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான்.
அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து,
“ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா” என்றான்.
“சரி”, என்று அவனுடன் நடந்தான்.
வழியில் அவனுடைய செருப்பு ‘சரக்’ என அறுந்தது.
அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.
“டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?” என்று சிரித்தான் நண்பன்.
“அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது” என்றான்.
“ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?” என்றான் நண்பன்.
“காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, ‘வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்’-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு .




