Oplus_131072
கோவில் வாசலில் கந்தல் ஆடையுடன் அமர்ந்திருந்தான் ஒரு ஏழை. வரும் பக்தர்களிடம், ”பசிக்குது ஐயா… ஒரு ரூபாய் தர்மம் பண்ணுங்க” என்று கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
அதே நேரம், கோவிலுக்குள்ளே பட்டுச் சட்டை அணிந்து, கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் கம்பீரமாக நின்றிருந்தார் ஒரு கோடீஸ்வரர். அவர் கண்கள் மூடி, ”இறைவா! இந்த மாதம் ஆரம்பித்த புது பிசினஸில் பல கோடி லாபம் கிடைக்க வேண்டும்… இன்னும் அந்தப் பெரிய பங்களா கைக்கு வர வேண்டும்” என மனமுருக வேண்டிக் கொண்டிருந்தார்.
வெளியே இருப்பவன் வயிற்றுப் பசிக்காகக் கேட்டான்; உள்ளே இருப்பவன் ஆசைப் பசிக்காகக் கேட்டான்.




