டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வால், வரும் 15-ம் தேதி முதல் லாரி வாடகை 25% உயர்த்தப்படுகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




