
தமிழகத்தில் தற்பொழுது மழை காலம் தொடங்கி இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வளிமண்டல மேல்லடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் நள்ளிரவு சுமார் ஒரு மணி வரையில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.