ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் கொல்கத்தா அணிக்கும் குஜராத் அணிக்கும் கொல்கத்தாவில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 198க்கு 3 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், கில் 90 ரன்களும் சாய் சுதர்ஷன் 52 ரங்களும் எடுத்தனர். பௌலிங்கில் ராஜஸ்தான் அணியின் அரோரா, ராணா, ரஸ்ஸல் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய கொல்கத்தா அணி சுமாராக தான் விளையாடியது. ரஹானே 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. இறுதியில் கொல்கத்தாவால் வெறும் 159 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டிடை வென்ற குஜராத் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.




